பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற ருமாரோலாண்ட் இசைத் திருவிழா வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பிரதான மேடையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
“தீ விபத்தினால் ருமாரோலாண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடை கடுமையாக சேதமடைந்துள்ளது” என விழா ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை (16) மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
“சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” இந்த தீவிபத்து சம்பவம் பூம் நகரில் இடம்பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது விழாவிற்கு வந்தவர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை, ஆனால் சுமார் 1,000 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை