Saturday, February 28, 2026 10:43 pm
இந்தியாவுடனான அரசியல் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தான் கிறிக்கெற் வீரர்கள் புறக்கணிக்கப்படலாம் என்ற தகவல்கள் இருந்தபோதிலும், ஹாட்ரிக் அணிக்கான தேர்வில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என இங்கிலாந்து , வேல்ஸ் கிறிக்கெற் சபைகள் செவ்வாயன்று தெரிவித்தன.
எட்டு அணிகளைக் கொண்ட போட்டியின் நான்கு இந்திய உரிமையாளர்களான மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் , சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகியவை அடுத்த மாத ஏலத்திற்கு பாகிஸ்தான் வீரர்களை பரிசீலிக்கவில்லை என்று பிபிசி கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
63 ஆண்கள் நான்கு பெண்கள் உட்பட மொத்தம் 67 பாகிஸ்தான் வீரர்கள் – தேர்வுக்கு தங்களை சமர்ப்பித்துள்ளனர்.
“இங்கிலாந்து , வேல்ஸ் கிறிக்கெற் சபைகளும், , ஹாட்ரிக் அணியில் உள்ள எட்டு அணிகளும் ஹாட்ரிக் அணியை உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க ,திறந்த போட்டியாக தொடர்ந்து வைத்திருப்பதை உறுதி செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர பதட்டங்கள் காரணமாக 2009 முதல் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் லாபகரமான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இடம்பெறவில்லை.
பல ஐபிஎல் உரிமையாளர்கள் இப்போது பல்வேறு நாடுகளில் அணிகளை சொந்தமாகக் கொண்டுள்ளதால், பாகிஸ்தான் கிறிக்கெற் வீரர்கள் பல்வேறு லீக்குகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் மேலும் குறையும் அபாயத்தில் உள்ளன. மார்ச் 11, 12 ஆம் திகதிகளில் இலண்டனில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.

