கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை ஒப்படைப்பது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்று ஹமாஸ் திங்களன்று அறிவித்ததை அடுத்து, “காஸ பகுதியில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும்” தயாராக இருக்குமாறு இராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸின் அறிவிப்பை “காஸா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாக” கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காஸாவில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும் மிக உயர்ந்த மட்டத்தில் தயார் நிலையில் இருக்கவும், என்கிளேவ் அருகே உள்ள சமூகங்களைப் பாதுகாக்கவும்” இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டதாக காட்ஸ் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் , பாதுகாப்பு அதிகாரிகளுடன் நிலைமை மதிப்பீட்டுக் கூட்டத்தை கூட்டுகிறார் என்று பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் Ynet செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!