கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை ஒப்படைப்பது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்று ஹமாஸ் திங்களன்று அறிவித்ததை அடுத்து, “காஸ பகுதியில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும்” தயாராக இருக்குமாறு இராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸின் அறிவிப்பை “காஸா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாக” கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காஸாவில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும் மிக உயர்ந்த மட்டத்தில் தயார் நிலையில் இருக்கவும், என்கிளேவ் அருகே உள்ள சமூகங்களைப் பாதுகாக்கவும்” இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டதாக காட்ஸ் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் , பாதுகாப்பு அதிகாரிகளுடன் நிலைமை மதிப்பீட்டுக் கூட்டத்தை கூட்டுகிறார் என்று பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் Ynet செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது
Trending
- சாமர சம்பத்துக்கு பிணை!
- முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு – துரைராசா ரவிகரனின் அஞ்சலி
- “தெற்கில் உள்ளோர் வடக்கிற்கு செல்ல மே 18 ஆம் திகதியே சிறந்த நாள்” சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு
- ப்ளூமெண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு
- முள்ளிவாய்க்கால் நினைவு தினம் – வீரவணக்கம் செலுத்திய தவெக தலைவர் விஜய்!
- இத்தாலியின் மாசிமோ ஸ்டானோநடைப்பயணத்தில் உலக சாதனை
- கலிபோர்னியாவில் குண்டுவெடிப்பு ஒருவர் பேர் பலி, 5 பேர் காயம்.
- ருமேனியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கியது.