மலை சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என நேபாள அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக உயரமான மலையாக காணப்படுகின்றது.
இதில் ஏற ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 13 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது.
இந்நிலையில் மலை சுற்றுலாவை மேம்படுத்த குறைவான உயரமுடைய 97 சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என நேபாள அரசு அறிவித்துள்ளது.
இதன்படி கர்னாலா, சுதுர்பாசிம் மாகாணங்களில் 19,000 அடி உயரம் முதல் 23,000 அடி உயரம் வரை உள்ள 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏற முடியும் எனவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு முன் குறைந்த உயரமுடைய சிகரத்தில் ஏறியிருக்க வேண்டும் எனவும் நேபாள அரசு பரிந்துரைத்துள்ளது.