நுவரெலியா உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவிவருகின்றது.
கடந்த சில நாட்களாகவே இந்நிலைமை காணப்படுகின்றது.
கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர். முன்னோக்கி செல்லும் வாகனங்களை உரிய வகையில் அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா நகர எல்லை, ஹவாஎலிய, பொரலந்த, உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி போன்ற பகுதிகளில் மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- பாகிஸ்தானில் பருவமழையால் 124 பேர் மரணம்
- 35 குழந்தைகள் காஸாவில் இருந்து ஜோர்தனுக்கு சென்றனர்
- சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை கண்டிக்கிறது ஆப்கானிஸ்தான்
- செவ்வாய் பாறை $4.3 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது
- பாராளுமன்றத்தை சுற்றிய ட்ரோன்
- நடிகை எம்மா வாட்சன் 6 மாதங்கள் வாகனம் ஓட தடை
- கெஹெலிய குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு
- கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு