இரண்டு நிதி மோசடி தொடர்பான புகாரில் 54 வயதான சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
அவுஸ்திரேலியா சுற்றுலா விசா வழங்குவதாகக் கூறி ரூ. 1.5 மில்லியனையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாகக் கூறி ரூ. 1.916 மில்லியனையும் மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரண்டு புகார்களின் அடிப்படையில், நேற்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்றம் அந்தப் பெண்ணை ஜூன் 11 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது.