வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்த மக்களும், பௌத்த பிக்கு ஒருவரும் பாதணிகளுடன் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடல் கடந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள் பாலிப்பவள் நயினை நாகபூசணி தாய்.
ஆலயம்சார் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பொழுது பாதணி அணிந்து ஆலயத்திற்குள் பிக்கு மற்றும் பலர் வருகை தந்தமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆலயத்தில் புனிதம் பேணப்படவேண்டுமென்பது நியதி.
தமிழ் மக்களின் புனித இடத்தில் பிக்கு ஒருவரும் தென்னிலங்கையிலிருந்து வரும் சிலரும் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்கக்கூடியதல்ல என விசனம் தெரிவிக்கின்றனர் இந்துக்கள்.
நாகபூசணி அம்மன் ஆலயம் பலரும் வியந்து பார்க்கும் வரலாறு கொண்ட, உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து தரிசித்துச் செல்லும் புகழ்பெற்ற தளமாக காணப்படுகின்றது.
இந்நிலையில், பாதணிகள் அணிந்து வருதல் போன்ற செயற்பாடுகள் புனித தளத்திற்கு உகந்ததல்ல என்பதும் குறிப்படத்தக்கது.