பாணந்துறை, வாலனை கெமுனு மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று (02) காலை 8 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட போது துப்பாக்கி செயலிழந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.