தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவைகள் வாரம் இன்று (22) ஆரம்பமாகியுள்ளது.
தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று ஆரம்பமாகிய திட்டத்திற்கு அமைய, இந்த நடமாடும் சேவைகள் வாரத்தை நாடு முழுவதும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, வேலைவாய்ப்பு கண்காட்சிகள் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட தொழிலாளர் அமைச்சகத்திற்குச் சொந்தமான பல சேவைகளை இதன் மூலம் பெற முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.