திபெத்தில் இன்று (12) அதிகாலை 2:41 மணியளவில் நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
இதுவரை யாருக்கும் காயமோ அல்லது சேதமோ பதிவாகவில்லை.
முன்னதாக மே 8 ஆம் திகதி, இந்தப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.