தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“உண்மையில், எங்களுக்கு செவிலியர் பற்றாக்குறை உள்ளது. வடக்கில் மட்டும், 33 பிராந்திய வைத்தியசாலைகளில் செவிலியர்கள் இல்லை. 2020, 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய 2,650 மாணவர் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை இந்த வெள்ளிக்கிழமை (18) நாங்கள் அங்கீகரித்து வெளியிடுகிறோம். எனவே, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, கடந்த காலத்தில் செவிலியர் பட்டம் பெற்ற 875 பட்டதாரிகளை பொது சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளோம். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் 18 ஆம் திகதி வெளியிடப்படும். அதன்படி, பயிற்சி பெறுபவர்களில் ஒரு பகுதியினருக்கும், AL சித்தி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கும் பயிற்சியை ஆரம்பிக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவுள்ளோம்” என்றார்.
Trending
- கிழக்கு ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் 11 பேர் காயம்
- போயிங் 777 கொழும்பு சேவையை மேம்படுத்துகிறது
- விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார் சுக்லா
- ஏமனில் பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைப்பு
- போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை முன்னர் கண்டறிந்ததா இங்கிலாந்து ஒழுங்குமுறை நிறுவனம்?
- தாதியர் சேவை வெற்றிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
- மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி குடும்பஸ்தர் பலி
- ஊழிய, ஊதிய ஒழுங்குபடுத்தல் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்