சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி , குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சிநாளை 6 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
அதனால் இரண்டு படங்களும் குறுகிய காலத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானால் அது எதாவது ஒரு படத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க சொல்லி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்நிலையில் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் இதுவரை ‘குட் பேட் அக்லி’ படத்தின் சேட்டிலைட் உரிமை விற்கப்படவில்லையாம். அதனால் படத்தை மே 1 ஆம் திகதி அஜித் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யலாமா என ஆலோசித்து வருகிறதாம் படக்குழு. ஆனால் சன் தொலைக்காட்சியோடு சேட்டிலைட் பிஸ்னஸ் பேசப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை