Saturday, August 23, 2025 8:51 am
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையை விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் தேசியத் தலைவர்கள் கைது செய்யப்படக்கூடாது என்று சில உறுப்பினர்கள் வாதிட்டனர். “சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது தலைவர்களை கைது செய்ய முடியாது என்று மக்கள் சொல்வதைக் கேட்கிறோம். இது என்ன தர்க்கம்?” என்று என்று அவர் கேள்வி எழுப்பினார்.

