சர்வதேச கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இரண்டு மீனவர்களுக்கும் கடற்படை அதிகாரி ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.அப்போது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததால் இந்திய மீனவர்கள் இருவரின் காலில் காயம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை