ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,பெர்லின் பிராண்டன்பர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜூன் 11 முதல் 13 வரையில், ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று(10) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜேர்மனிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் வழங்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு விழா இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனையில் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித் ஹெராத் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் குழுவும் உள்ளனர்.