பெலரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 86.82 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக பெலாரஷ்ய மத்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
செர்ஜி சிரான்கோவ் 3.21 சதவீத வாக்குகளைப் பெற்றார், ஒலெக் கைடுகேவிச் (2.02 சதவீதம்), அன்னா கனோபட்ஸ்காயா (1.86 சதவீதம்) , அலெக்சாண்டர் கிஷ்னியாக் (1.74 சதவீதம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். சுமார் 3.60 சதவீத வாக்காளர்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிராக வாக்களித்தனர்.
ஜனவரி 26 அன்று பெலாரஸில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு 85.69 சதவீதமாக இருந்தது.பெலாரஷ்ய சட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பவார்.
லுகாஷென்கோ முதன்முதலில் பெலாரஸின் ஜனாதிபதியாக 1994 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 2001, 2006, 2010, 2015 , 2020 ஆம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு