தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை NPP கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று தாக்கிய சம்பவம் ஒன்று வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது.
இன்று நாட்டில் நடைபெறும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் வேலணை பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் தொடர்பிலான கள நிலைவரங்களை செய்தி சேகரிப்பாளர் செய்தியை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை வேலணை துறையூர் ஐயனார் வித்தியாலய வாக்காளர் மையத்தின் அருகே NPP யின் ஆதரவாளர்கள் இன்னொரு தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்த சம்பவத்தை வீடியோ செய்தியாக சேகரித்துக் கொண்டிருந்த போதே குறித்த NPP குழு ஊடகவியலாளரை தாக்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்படுள்ளது.