செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை, நீதி, நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களாக தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது திடமாக பதில்களைத் தேடி வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் உறுதியாக நிற்கிறது.
இலங்கை அரசாங்கம் குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் தங்கள் பணியை வெளிப்படைத் தன்மையுடனும் விரைவுடனும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனையுடனும் நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
