செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கும், ஊழியர்களுக்கும் இன்று (14) வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
முல்லைத்தீவு, வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் இருந்த செஞ்சோலையில் வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவிகள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 53 பாடசாலை மாணவிகளினதும், 4 பணியாளர்களினதும் 19ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி வள்ளிபுனம் இடைக்கட்டில் இருந்த செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற அதே நேரத்தில் இன்று உணர்வு பூர்வமாக உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட பாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.