Tuesday, September 30, 2025 2:02 pm
மெதிரிகிரிய தேசிய பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிரமதானம் நடைபெற்ற போது 40 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மெதிரிகிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வகுப்பறைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த மாணவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து மாணவர்கள் தற்போது உள் சிகிச்சை பெற்று வருகின்றனர், மீதமுள்ளவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

