கொழும்பு – வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள 5 மாடி கட்டிடத்திலிருந்து நேற்றைய தினம் 59 வயதுடைய ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.
அந்த நபர் கட்டிடத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் கண்ணாடிகளைத் துடைக்கும்போது அவர் தற்செயலாக கீழே விழுந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.