மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று (11) காலை அவிசாவளை – கொழும்பு, பழைய வீதியான வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 15 பேர் காயமடைந்ததுடன் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துத் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வெல்லம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மீத்தோட்டமுல்ல சந்திக்கும் இடையில் வீதியோரத்தில் மூன்று லொறிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதிவேகமாக வந்த பயணிகள் பஸ், நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மற்ற மூன்று வாகனங்களும் மோதியதில் நான்கு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
மேலும், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.