கொழும்பில் பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அதிகாரிகள் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.