Sunday, March 22, 2026 8:21 pm
எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தாமதக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 350% முதல் 400% வரையான அளவில் அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தின் செயலாளர் இநாம் கபூர் தெரிவித்துள்ளார். கொள்கலன்களை விடுவிக்கும் செயல்முறைக்கு குறைந்தது 4-5 நாட்கள் எடுப்பதாகவும், அக்காலப்பகுதியில் ஒரு நாளைக்கு 15,000 ரூபா வீதம் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

