குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாததால் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
30 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொண்ட குழு நேற்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த நபர்கள் குவைத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தூதரகம் தலையிட்டு அவர்களின் விடுதலையைப் பெற்றது.
அதே நேரத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்களின் பயணச் செலவுகளை ஈடுகட்டியது.