குருநாகலின் வெஹெர பகுதியில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் நான்கு பேர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று 11 மணியளவில் எரிபொருள் நிரப்பி நிலையத்திற்கு LP எரிவாயுவை நிரப்ப லொறி ஒன்று வந்து வாயுவை நிரப்பும் போது 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயு தொட்டிகளில் ஒன்று வெடித்ததால் இந்த தீ ஏற்பட்டுள்ளது..
வெடிக்காத மற்றொரு 6,000 லீற்றர் வாயு தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.