கிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாய் பெறுமதி கொண்ட 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிசாரும், தர்மபுரம் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
அதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகித்து பளை பகுதியைச் சேர்ந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரது வீட்டை வாடகைக்கு பெற்று அங்கிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.