அரகலயவால் பாதிக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாகப் பெற்ற பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கிராமத்தையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) தெரிவித்தார்.
‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் திட்டத்தில் கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் பிமல் ரத்னாயக்க மேற்கொண்டார். ரயில் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார்.
அப்போது ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையி,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம், 7 இலட்சம், இறுதியாக 10 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த கால அமைச்சர்கள் பல இலட்சங்களை அவர்களது வீடுகளுக்காக நட்டஈடாக பெற்றுக்கொண்டுள்ளனர். உதாரணமாக கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈட்டுத் தொகையை வைத்து இங்கு கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம்.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் நாடு முழுவதும் காணப்படுகிறது. அது போல கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் போதாது. அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
அந்த பிரச்சினைக்கு மக்களுடனும் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட வேண்டும். அதனை விரைவில் செய்வோம்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Trending
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் – பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
- ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு வெள்ளைமாளிகை தடை
- 200 தெலுங்கு ஊழியர்களை வெளியேற்றிய அமெரிக்க நிறுவனம்
- அதி வேக வீதியில் குழந்தை செலுத்திய கார்
- கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை
- அமெரிக்க வரிகளால் கடுமையாகப் பாதிப்படைந்த சீன சிறு வணிகங்கள்
- மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்கு
- முதன்முறையாக பெண்கள் குழு விண்வெளிக்கு பயணம்