இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (Iட்ஃப்) ஒபரேஷன் கிதியோன் சாரியட்ஸ் என்ற புதியஇ ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
இது காஸா பகுதியில் இஸ்ரேலின் இருப்பை விரிவுபடுத்துவதையும் முக்கிய மூலோபாய பகுதிகளில் முன்னேறுவதையும் நோக்கமாகக் கொண்டது.
இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்களின்படி, இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (மே 16) இரவு வடக்கு காசாவில் கடுமையான குண்டுவீச்சுகளுடன் தொடங்கியது.
இதில் காசா நகரத்தின் துஃபா சுற்றுப்புறம் உட்பட, கான் யூனிஸ், ஜபாலியா மற்றும் டெய்ர் அல்-பலாஹ் போன்ற தெற்குப் பகுதிகளில் ஒரே நேரத்தில் இராணுவ நடவடிக்கையும் தொடங்கியது.
பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காசாவை நிர்வகிக்கும் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸை முற்றிலுமாக தோற்கடித்தல் ஆகியவை இதில் அடங்கும்.