இலங்கையில் இரண்டு முன்மொழியப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலை பண்ணை திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (ஏஜிஇஎல்)அறிவித்தது.
நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டக் குழுக்களின் மறுசீரமைப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரிலும், பூனேரியிலும் 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் நிறுவனம் கலந்துரையாடி வந்தது.
ஏஜிஇஎல் ஏற்கனவே சுமார் 5 மில்லியன் டொலரை முன்வளர்ச்சி நடவடிக்கைகளில் முதலீடு செய்திருந்தது மற்றும் மன்னாரின் சுற்றுச்சூழல் அனுமதியைத் தவிர, உச்ச நீதிமன்றத்தின் மதிப்பாய்வின்
2023 பிப்ரவரியில் 442 மில்லியன்டொலர் முதலீட்டிற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற போதிலும், விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புதிய குழுக்களை அமைக்க இலங்கை முடிவு செய்ததால் நிறுவனம் தாமதங்களை எதிர்கொண்டது.
இலங்கையின் இறையாண்மை முடிவுகளுக்கு மதிப்பளித்து, அதானி கிரீன் எனர்ஜியின் வாரியம் இந்த முயற்சியில் இருந்து விலகத் தீர்மானித்தது.
Trending
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு