இலங்கையின் தமிழ் மேடை நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் உச்சம் தொட்ட கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 45ஆவது நினைவஞ்சலி எதிர்வரும் வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு அவரது சிஷ்யரும் நன்பருமான எம்.சண்முகராஜாவின் ஏற்பாட்டில் கொழும்பு பழைய நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பருத்தித்துறையை பிறப்பிடமாக கொண்ட ஸ்ரீசங்கர் தனது கலைத்துறை பங்களிப்புகளை கொழும்பில் முன்னெடுத்து தமிழ் மேடை நாடகத் துறைக்கு புத்துயிர் அளித்தவர். நாடகத்துறை வளர்ச்சியோடு இலங்கை தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக நின்று செயற்பட்டவர்.
தென்னிந்திய திரைப்படத்துறையின் ஆலவிருட்சமான நடிகர் சிவாஜி கணேசனின் நெருங்கிய நன்பரான இவர் ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் நடித்து நமது நாட்டுக்கு பெருமை சேர்தவர்.நம்நாட்டிலும் மஞ்சள் குங்குமம் என்ற முழுநீளத் திரைப்படத்தை தயாரித்து நடித்து சாதனை படைத்தவர்.
இத்தகைய சிறப்புமிக்க இக் கலைஞரை இன்றைய இளம் சமுகத்தினர் அறியும் வகையில் ஸ்ரீசங்கர் நற்பணி மன்றம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி அதனூடாக கடந்த 45 ஆண்டுகளாக இந்த அஞ்சலியை எம்.சண்முகராஜா நடத்திவருகிறார்.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை