சீனாவில் மனித உருவ “ரோபோ” ஒன்று, அந்நாட்டின் பாரம்பரிய கலையான நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் கலாநிதி பட்டம் (PHD) பெறுவதற்கான, கற்கை நெறியில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் தியேட்டர் அகடமியில், மனித உருவிலான ரோபோ ஒன்று, அந்த நாட்டின் பாரம்பரிய நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் கலாநிதி பட்டம் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ (AI) கலைஞர் என வர்ணிக்கப்படும், “எக்ஸ்யூபா-01” (Xueba 01) ரோபோ, அழகான ஆணின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஷாங்காய் (Shanghai) கலைஞரான பேராசிரியர் யாங் கிங்கிங்கின் (Professor Yang Qingqing) வழிகாட்டுதலின் கீழ், செப்டம்பர் 14 இல் இந்த ரோபோ தன் கல்விப் பயணத்தை ஆரம்பிக்கிறது.
மேடை நிகழ்ச்சி, திரைக்கதை எழுதுதல், மொழி உருவாக்கம் உட்பட பல்வேறு பாடத் திட்டங்களை இந்த ரோபோ கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.