பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
குடும்ப தகராறு காரணமாக மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் நேற்று (14) மாலை கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் மெகதம மக்கெந்தவின்ன பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்ய மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.