கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (06) காலை 65 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோகைனுடன் இந்தியப் பெண் ஒருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிசோரமைச் சேர்ந்த 29 வயதான சமையல்கார பெண் 1.644 கிலோகிராம் கோகைனை பாலிதீனில் சுற்றப்பட்டு தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைத்திருந்தார்.
முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் இதற்கு முன்பு மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்திருப்பது தெரியவந்தது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடந்தது.
மேலதிக விசாரணைகளின் மூலம், கொழும்பின் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் போதைப்பொருட்களைப் பெறுவதற்காகக் காத்திருந்த மாலபேயைச் சேர்ந்த 50 வயது தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.