கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள் அந்தப் பகுதியில் ஒரு தொழிலதிபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஆயுதம் சுடத் தவறியதால், சந்தேக நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்த முடியவில்லை.
துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக ஒரு துப்பாக்கிதாரி ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார், மற்றொருவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மற்றைய துப்பாக்கிதாரியைக் கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.