மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவு ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்தது. 1969ல் 20.85 ஹெக்டேராக இருந்தது. ஆனால் 2018ல் 5.97 ஹெக்டேராக சுருங்கியது. நிபுணர்களின் கூற்றுப்படி, கரியாச்சல்லி , கசுவாரி தீவுகள் 2035க்குள் மூழ்கிவிடுமாம். இந்நிலையில் கரியாச்சல்லி தீவை காப்பாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது 50 கோடி ரூபாவில் புனரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக கரியாச்சல்லி தீவை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளது.
முன்னதாக இதேபோல் சிக்கலை எதிர்கொண்ட வான் தீவு வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான கடலடிப்பவளப்பாறைகள் பரப்பை அதிகரித்து, சுற்றியுள்ள நீரை ஆழமற்றதாக்கி, வண்டல் குவிப்பை அதிகரித்திருந்தது. இதனால் அங்கு 37-க்கும் அதிகமான துணை மற்றும் பெரிய பவளப்பாறைகளில் வாழும் கடல்வாழ் இனங்கள் பெருகின.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!