இந்தியாவின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஓகஸ்ட் நடுப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கிறிக்கெற் தொடர் ஒன்றை நடத்துவதற்கான கலந்துரையாடல் நடைபெறுகிறது.
ஜூலை ஓகஸ்டில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) ஒத்திவைப்பு, இலங்கைக்கான சாதகத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், இரு நாடுகளும் ஒரு குறுகிய இருதரப்பு தொடரின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன – ஒருவேளை மூன்று ஒருநாள் ,மூன்றுரிடி20 போட்டிகளைக் கொண்டதாக இருக்கலாம்.
இந்த ஆண்டு இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய முதலில் திட்டமிடப்படவில்லை,பங்களாதேஷுடன் விளையாடத் திட்டமிடப்பட்டது. அது இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை ஓகஸ்ட் மாத இறுதியில் ஸிம்பாப்வேக்கு புறப்பட உள்ளது, அங்கு தொடர் ஓகஸ்ட் 29 ஆம் திகதி தொடங்குகிறது. இதன் விளைவாக ஓகஸ்ட் நடுப்பகுதி மட்டுமே இந்தியாவை நடத்துவதற்கு சாத்தியமான காலமாகும்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு