எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது 15 பேர் உயிரிழந்த நிலையில் ஜீப் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பஸ் எல்ல திசையிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வாகனம் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.