க.பொ.த உயர்தரப் பரீட்சையின் 2024 ஆம் ஆண்டிற்கான மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
வெளியிடப்பட்ட மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஓகஸ்ட் 7 முதல் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ் இந்திகா குமார லியனகே தெரிவித்துள்ளார்.