உக்ரைனின் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்பு சனிக்கிழமை ( 22) இரவு 267 ட்ரோன்கள் ஏவப்பட்டதக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
13 பிராந்தியங்களில் 138 ட்ரோன்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 119 ட்ரோன்கள் தங்கள் இலக்குகளை அடையத் தவறிவிட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிராக ஈரானிய ட்ரோன்கள் முதன்முதலில் நிறுத்தப்பட்டதிலிருந்து இது மிகவும் மோசமான ட்ரோன் தாக்குதலைக் குறிக்கிறது.
கடந்த வாரத்தில் மட்டும், ரஷ்யா கிட்டத்தட்ட 1,150 தாக்குதல் ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வழிகாட்டப்பட்ட வான்வழி தாக்குதல் , பல்வேறு வகையான 35 ஏவுகணைகளை உக்ரைனுக்கு எதிராக ஏவியதாக விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.