இலங்கை ஓட்டுநர் உரிமத்தை இத்தாலிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவது தொடர்பான இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது, உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களின் வடிவத்தில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதமாகி வருகிறது.
இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தயாராக இருந்தாலும், இலங்கை ஓட்டுநர் உரிமங்களின் வடிவம் சமீப காலங்களில் குறைந்தது மூன்று முறை மாறியதால், அவற்றின் நம்பகத்தன்மையை நிறுவ அவற்றைச் செயல்படுத்த முடியவில்லை என்று இத்தாலிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் இத்தாலியில் ஓட்டுநர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த பல இலங்கையர்கள் ள் வெளியுறவு அமைச்சகம் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இத்தாலியில் வேலை தேட விரும்பும் இலங்கையர்கள் சட்டவிரோதமாக அந்த நாட்டிற்குள் நுழைய முயற்சிக்காமல் சட்டப்பூர்வமாக வேலை செய்யக்கூடிய வகையில், தென் கொரியாவுடன் உள்ளதைப் போன்ற ஒரு வேலை ஒதுக்கீட்டு முறையைப் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசாங்கம் முயற்சித்து வருவதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!