ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் COVID-19 மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணரான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா, எல் எஃப் பொயிண்ட் செவன் (LF.7) மற்றும் எக்ஸ் எஃப் ஜி (XFG) ஆகிய ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் கூறினார்.
நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மூலம் இந்த கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தப்பட்டது என வைத்திய நிபுணர் விளக்கினார்.
இருப்பினும், இந்த COVID-19 வகைகள் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளர்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.