கேகாலை – கலிகமுவ பகுதியில் இன்று அதிகாலை, இ.போ.ச பஸ், தனியார் பஸ் ஆகிய இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பஸ், கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஆகிய இரண்டுமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.