முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற 4 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாம் அங்கிருந்து அகற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆங்குள்ள தகரங்கள் தரலாம் என இராணுவ சிப்பாய் ஒருவர் கூறியதற்கு அமைவாக இராணுவ முகாமுக்கு நேற்று முன்தினம் (07) வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அப்பிரதேசத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்களை முகாமில் இருந்த இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
அங்கிருந்து மூவர் நேற்று (08) வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது .
இந்நிலையில் காணாமல் போன இளைஞன் இன்று (09) சனிக்கிழமை அதிகாலை முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.