2025ஆம் ஆண்டுக்கான இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் மின்சார இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் அருந்தவராசா புவிதரன் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீற்றர் 18 சென்டிமீற்றர் உயரம் தாண்டி தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஓகஸ்ட் 18 முதல் 20 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறும் இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தல் போட்டியிலேயே அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை , இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் சாதனை ஆகிய இரண்டும் புவிதரன் வசமாகின.


