யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகை கடற்படையினர் நேற்று (04) கைப்பற்றியுள்ளனர்.
மீன்பிடி படகை சோதனை செய்த கடற்படையினர் அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.