ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் உத்தியொக பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு அனுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இலங்கைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, தனது பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகள் ஆழமாக்கப்பட்டுள்ளது.
எனது பயணத்தின் போது வழங்கப்பட்ட அரவணைப்புக்கு ஜனாதிபதி திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது நிச்சயமாக நமது இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நரேந்திர மோடி ஒரு செய்தியில் கூறினார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, இலங்கையின் அரச தலைவர்கள் மற்றும் அரசுத் தலைவர்களுக்கான மிக உயர்ந்த கௌரவமான இலங்கை மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது.
புறப்படுவதற்கு முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜெய ஸ்ரீ மகா போதி கோயிலுக்கு வழிபாடு நடத்தினார்.
மஹோ – அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்புகள் மற்றும் புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ – ஓமந்தை ரயில் பாதையையும் அவர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.