Thursday, July 3, 2025 10:34 am
இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியதால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள், 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் 20 இற்கும் மேற்பட்டோரை மீட்டனர். மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

