சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
Trending
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.