பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அமைச்சின் தரையில் அமர்ந்து, அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்புப் பணியாளர்கள் பிரதான அலுவலகத்திற்குச் செல்வதைத் தடுத்தனர்.
அதன் பிறகு ஆசிரியர்கள் அமைதியாக தரையில் அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.